பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை





1; பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"

2; பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர் படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூன் முதுகு விழுவதை தடுக்கிறது. கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்.

3; கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும். பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது, இடுப்பு எலும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்.

4; மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,

5; பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது. பாயில் தலையணை இல்லாமல் அல்லது லேசான தலையணை உடன் உறங்குவதே சிறந்தது.

6; ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,

7; பாய் உடல் சூட்டை உள் வாங்கக் கூடியது,

8; பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லாத ஒரு சீர்வரிசை கிடையாது,

9; ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,

10; கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்...
*உடல் உஷ்ணம்,வதையும்...

*உடலின் வளர்ச்சி,யும்...

*ஞாபக சக்தி,யையும்...

*மன அமைதி,யும்...

*நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது.

பிளாஸ்டிக் பாய் சூடு உண்டாகி ஆபத்து என்பதை உணரவும்.