நக சுத்திக்கு வீட்டு வைத்தியம்

நக சுத்திக்கு வீட்டு வைத்தியம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். நக சுத்தியை குணமாக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகளை பார்க்கலாம்.

இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், செப்டிக் ஆகி விரலுக்கே ஆபத்தாக முடியும். இங்கு அதற்கான எளிய தீர்வுகளை காணலாம்.

மிக எளிதாக கிடைக்கக் கூடிய கற்றாழைக்கு நக சுத்தை ஆற்றும் சக்தி உள்ளது. கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் அரைத்து, விளக்கெண்ணெய் விட்டு சூட வைத்து, அதை நகத்தில் பூசினால் நகசுத்தி குணமாகும்

ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அந்த நீரில் விரலை 30 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இப்படி தினமும் 3 வேளை வைத்து, வைட்டமின் ஈ எண்ணெயை தேய்த்தால் உடனடி தீர்வு கிடைக்கும்

உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும், நக சுத்தி சரியாகும். சாதாரண கல் உப்பை கரைத்து அந்த நீரையே இதற்கு பயன்படுத்தலாம். கடல் நீரில் கால் நனைத்தாலும் நக சுத்தி சரியாகும். பின்னர். காலைத் துடைத்து விட்டு அந்த இடத்தில் வினிகரை தடவ வேண்டும்.

சோடா உப்பு பசையை நக சுத்தி வந்த இடத்தில் தடவினால், அதில் உள்ள அலகலைன் பூஞ்சைகளை வளரவிடாமல் தடுத்து நக சுத்தியை குணமாக்குகிறது.

எலுமிச்சை பழத்தை இரு துண்டாக வெட்டி நகத்தை புகுத்தினாலும் நக சுத்தி வராது. மருத்துவ ரீதியாக இது நிரூபணம் ஆகவில்லை என்றாலும், அனுபவத்திற்கு நிரூபணமாகியுள்ளது.

மஞ்சளை விட மருத்துவம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நக சுத்திற்கு எளிமையான ஒரு மருத்துவம் என்னவென்றால், நீரில் மஞ்சளை கலந்து நகத்தில் தடவினால் போதும்.

இதே போல் வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும், விரலை சுற்றிலும் தேய்த்து வர, நக சுத்தி விரைவில் குணமாகும்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கலாமா?

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கலாமா?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்.

`மற்றவர்களை மரியாதையாக நடத்துவதும், நம்மையறியாமல் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும்பட்சத்தில் மன்னிப்புக் கேட்பதும்தான் மனிதத்தன்மை. இதில் பெற்றோர், பிள்ளைகள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டாலே `பெத்தப் பிள்ளைங்ககிட்ட மன்னிப்புக் கேட்பதா' என்கிற ஈகோ காணாமல் போய்விடும். இப்படி ஈகோ இல்லாத பெற்றோர்களிடம் வளரும் பிள்ளைகள் தாங்களும் அப்படியே வளர்வார்கள். அடுத்தது, ஒரு தடவை மன்னிப்புக் கேட்டபிறகு, அந்தத் தவற்றைத் திரும்பவும் செய்யக் கூடாது என்பதிலும் பெற்றோர்களாகிய நாம்தாம் பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

`அம்மாவும் அப்பாவும் தப்புப் பண்ணிட்டா தயங்காம மன்னிப்புக் கேட்கிறாங்க' என்கிற எண்ணம் உங்கள் குழந்தைகளின் மனதில் பதிய பதிய காலப்போக்கில் அந்த உணர்வானது அன்பாகி, மரியாதையாகி, பக்தியாக மாறும். பெற்றவர்கள்மீது பக்தி செய்கிற பிள்ளைகள், வளர்ந்தபிறகு பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்ப மாட்டார்கள் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்பதில் இன்னொரு நுட்பமான விஷயமும் இருக்கிறது. உங்கள் குழந்தை ஒரு தவறு செய்துவிட்டது என்று நினைத்து அவனை/அவளை அடித்து விடுகிறீர்கள். பிறகு, பிள்ளைமீது தவறு இல்லை என்பது தெரிந்து அவனிடம்/அவளிடம் மன்னிப்புக் கேட்பது ஒருவகை. இதில் இன்னொரு வகையும் இருக்கிறது. அதாவது, பிள்ளை நிஜமாகவே தப்பு செய்துவிட்டது. அதனால் பிள்ளையை அடித்து விட்டீர்கள். இதன் பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நீங்கள் நிதானமானதும், பிள்ளையிடம் பேசுங்கள்.

`நீ இப்படித் தப்பு செய்ததால் அம்மாவுக்குக் கோபம் வந்து அடித்து விட்டேன். ஆனால், நான் அடித்ததற்கு `ஸாரி' என்று கேட்டு விடுங்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், `யாராவது தவறு செய்தால் அவர்களை அடித்தும் திருத்தலாம் போல' என்கிற பாடம் உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியவே கூடாது என்பதற்காகத்தான் இந்த மன்னிப்பு. கூடவே, செய்த தவற்றை மறுபடியும் பிள்ளைகள் செய்யக் கூடாது என்பதையும் அவர்கள் மனதில் பதிய வைப்பதும் உங்கள் கடமை.

கடைசியாக ஒரு விஷயம், பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்.

பெண்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கும் வழிமுறைகள்

 பெண்களுக்கு  அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கும் வழிமுறைகள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பிரச்சனைகள் தவிர்த்து உற்சாகமான, மகிழ்ச்சிகரமான, நிம்மதியான பணி அனுபவம் பெறுவதற்கான ஆலோசனைகளை பார்க்கலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பிரச்சனைகள் தவிர்த்து உற்சாகமான, மகிழ்ச்சிகரமான, நிம்மதியான பணி அனுபவம் பெறுவதற்கான ஆலோசனைகளை பார்க்கலாம்.

* வேலைக்குச் செல்லும் பெண்கள் பெர்சனல், அலுவலகம் என இரண்டு மொபைல்போன்கள் வைத்துக்கொள்ளலாம். அலுவலக நேரத்தில் பெர்சனல் மொபைலை மியூட்டில் வைத்துவிட்டு, வீடு திரும்பும் நேரத்தில் அதை உபயோகித்துக் கொள்ளலாம்

* பணியிடத்தில் ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் அதை பக்குவமாக கணவரிடமோ அல்லது தந்தையிடமோ ஆரம்பத்திலேயே சொல்லி வைப்பது நல்லது.

* உடன் பணிபுரியும் நெருங்கிய தோழிகளை வீட்டுக்கு அழைத்து ஒரு விருந்து கொடுத்து, நட்பை பலமாக்கிக்கொள்ளுங்கள். அலுவல் சிரமங்களை இணைந்து எதிர்கொள்ளும் தைரியத்தையும் திறனையும் அந்த நட்பு கொடுக்கும்.

* வீட்டுப் பிரச்சனைகளை அலுவலகத்தில் பகிராதீர்கள். உங்கள் குடும்பம் பற்றி எப்போதும் பாஸிட்டிவ் ஆகவே சொல்லி வையுங்கள். உங்களுக்கான மதிப்பு கிடைக்க, உங்கள் குடும்பம்தான் அடிப்படை என்பதை மறவாதீர்கள்.

* பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத அல்லது உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசாதீர்கள், யோசிக்காதீர்கள், யாருக்கும் ஆலோசனை சொல்லாதீர்கள். தோழியோ, சக அலுவலரோ, உயர் அதிகாரியோ உங்களிடம் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு சொல்லச்சொல்லிக் கேட்டால், உடனே பதில் சொல்லாதீர்கள். தீர சிந்தனை செய்து அதில் உள்ள சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு பதிலளியுங்கள்.

* பணி குறித்து நீங்கள் கோபமாகவோ அல்லது மூட் அவுட் ஆகவோ இருக்கும்போது அதற்கான காரணத்தை யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். அந்நிலையில் எதையும் பேசாதீர்கள். அந்தப் பிரச்சனை குறித்து பிறரிடம் பஞ்சாயத்து வைக்காதீர்கள். மனது சமநிலைக்கு வந்த பிறகு அதைப் பற்றி யோசியுங்கள், பேசுங்கள், முடிவு எடுங்கள்.

* என்ன கோபம் என்றாலும் யாரிடமும் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டாதீர்கள். மாறாக ஒரு புன்னகை மட்டும் உதிர்த்துவிட்டு சென்று விடுங்கள். பணிச்சூழலில் பிரச்சனை, நிரந்தரப் பகையெல்லாம் தேவையற்றது.

* அலுவலகத்தில் சக பணியாளரோ, மேலதிகாரியோ ஒரு குறை/புகார் கூறினால், அது உங்கள் வேலை குறித்த குறையேயன்றி, தனிப்பட்ட முறையில் உங்களைப் பற்றியதல்ல என்ற புரிதலுடன் அதை அணுகுங்கள். அதேபோலவே நீங்களும் மற்றவர்களின் மீதுள்ள குறைகளைக் கையாளுங்கள்.

* கூடியவரை தனியாக அலுவலகத்தில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். உங்களுடன் யாரேனும் ஒரு பெண் உடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 நீங்கள் உயரதிகாரியாக இருந்தால், உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் கவனமாகவும், கண்டிப்புடன் அதே சமயம் அன்புடனும் நடந்துகொள்ளுங்கள். 

லெமன் ஜூஸில் இருக்கும் 7 நன்மைகள்

லெமன் ஜூஸில் இருக்கும் 7 நன்மைகள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

அனைவரும் விரும்பி குடிக்கும் பானம் லெமன் ஜூஸ். இந்த லெமன் ஜூஸில் இருக்கும் நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

அனைவரும் விரும்பி குடிக்கும் பானம் லெமன் ஜூஸ். இந்த லெமன் ஜூஸில் இருக்கும் நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

இது ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.

தோலில் ஏற்படக்கூடிய கரும்புள்ளி மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது.

டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கத்தை நீக்குகிறது.

உடல் எடையைக் குறைக்கிறது.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

நுரையீரல் தொற்றுகளைக் குறைக்கிறது.

சிறுநீரக அமைப்பைச் சுத்திகரிக்கிறது.

முருங்கை - முந்நூறு நோய்களை விரட்டும்

முருங்கை - முந்நூறு நோய்களை விரட்டும்

முருங்கை - முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அளவில் சிறிய  குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையைவாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள்காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப்பிரச்னைக்கு முருங்கைக்கீரைமட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள்

காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம்

செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் திருவள்ளுவர். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. பொதுவாக, கேட்கும் திறனுக்கும், பேச்சுத் திறனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. பிறக்கும் போதே குழந்தைகளின் காதுகள், கேட்கும் சக்தியை இழந்து விட்டால் அவர்களுக்கு பேச்சு வராது. அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் கேட்கும் திறன் எவ்வளவு முக்கியம் என்று.

கேட்கும் திறனால் மட்டுமே மொழித்திறன் உருவாகி குழந்தை பேச தொடங்குகிறது. இத்தகைய கேட்கும் திறன் கொண்ட காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷினி கூறியதாவது:-

மனித உடலில் காதுகள் ஒரு இன்றியமையாத உறுப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. காதுகளுக்கு கேட்கும் திறன் மட்டுமல்லாது இன்னும் சில திறன்களும் இருக்கிறது. அவைகள், உடலின் சமநிலையை பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளையும் செய்கின்றன.

உடலின் சமநிலை மாறுபடும்போது, தள்ளாட்டம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகியவை வந்துவிடும். அதுமட்டுமின்றி தூங்கி எழும்போதும், ஒரு பக்கம் சாய்வதாலும் உடலின் சமநிலை மாறுபட்டு கிறுகிறுப்பு வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்வதென்றால், நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடப்பதற்கும் காதுகள் மிக அவசியமாகிறது.

பொதுவாக காதுகளின் அமைப்பு 3 பிரிவுகளாக உள்ளது. ஒன்று, வெளிக் காது. 2-வது நடுக்காது. 3-வது உள்காது. வெளிக்காது என்பது, செவி மடலில் இருந்து காது சவ்வு பகுதி வரை இருக்கும். நடுக்காது, ஜவ்வு பகுதியில் இருந்து காது நரம்பு தொடங்கும் பகுதி வரை இருக்கும். உள்காது, காது நரம்பில் இருந்து மூளை நரம்பு மண்டலம் வரை இருக்கும். இதில் செவிப்பறை என்பது நடுக்காதில் இருக்கும்.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற காதுகளுக்குள் புகும் ஒலி அலைகளின் சத்தம் 20 முதல் 20 ஆயிரம் ஹெட்ஸ் (அளவீடு) வரை தான் இருக்க வேண்டும். இந்த அளவீடு ஒலி அலைகளுக்கு சத்தம் குறைவாக இருந்தால் கேட்காது.

காதுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. அடிக்கடி சளிப்பிடித்தல், தொண்டை வலி, விபத்து போன்ற காரணங்களால் காதுகள் பாதிக்கப்படும். பொதுவாக நடுக்காதுக்கும், மூக்குக்கும் இடையே ஒரு துளை இருக்கும். அதன்வழியே கிருமிகள் எளிதாக நடுக்காதை சென்றடைந்து விடும். அந்தக்கிருமிகள் நடுக்காதில் உள்ள செவிப்பறையை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கேட்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.

பெரியவர்களை பொறுத்தவரை, அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கு தண்டு வளைதல், மூக்கில் கட்டி, சைனஸ் தொந்தரவு, பிற கட்டிகள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும். காது வலியுடன் சீழ் வடியும், சிலருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு முகவாதம் வரலாம். கண் இமைகள் மூடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. அப்போதும் சரிவர கவனிக்காமல் போனால் மூளையில் சீழ் கட்டிகள் தோன்றலாம். அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படலாம்.



பொதுவாக காதுகள் பாதிக்கப்படும் போது, முதலில் தலைவலி, காது வலி ஏற்படும். காதுக்குள் கொப்பளங்கள் தோன்றும். அதற்கடுத்த நிலையில் சீழ் வடியும். இதுபோன்று அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக காதுகளை பொறுத்தவரை பாதுகாப்பு என்பது முக்கியமானது.

அதிக சத்தத்தை கேட்கக் கூடாது. அவ்வாறு சத்தத்தை கேட்க நேர்ந்தால் காதில் முன்னெச்சரிக்கையாக பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வாகனங்களில் உள்ள காற்று ஒலிப்பான் (ஏர்ஹாரன்) மற்றும் கூம்புவடிவ ஒலி பெருக்கி சத்தமும் ஆகாது. காதை சுத்தப்படுத்த குச்சி, பட்ஸ் உபயோகிக்க கூடாது. சாதாரணமாக, விபத்தில் காதில் அடிபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி சளிப்பிடிக்க விடாமல் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

வாகனங்களில் போகும்போது காற்றின் வேகத்தில் பூச்சிகள் காதுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் தூங்கும் போது காதில் எறும்பு, சிறு பூச்சிகள் நுழைய வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால் தலையின் அடிப்பகுதி பாதிக்கப்படுவதுடன், மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். இதுதவிர வயதானவர்களுக்கு காதில் புற்றுநோய்க்கிருமி தொற்றும் ஏற்படலாம்.

பொதுவாக குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும் 1½ வயதில் சரளமாக பேச ஆரம்பிக்கும். 2 வயதில் அதற்கு சிந்திக்கும் திறன் வளரும். பரம்பரை வழியாக, சொந்தத்தில் திருமணம் செய்வதால் பிறவிக்குறைபாடாக காதுகேளாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தையை 3 மாதங்களில் கண்டறிந்து விடலாம்.

அதன்பிறகு ஒரு வருடத்தில் ஆடியோகிராம், பெரா ஆகிய 2 பரிசோதனைகள் மூலம் காதின் எந்தப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். பொதுவாக பிறவிக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உள்காதில் மற்றும் நரம்பில் தான் பிரச்சினைகள் இருக்கும்.

பொதுவாக காதுகளை பாதுகாக்க மற்ற சிறப்பு பயிற்சிகள் ஏதும் கிடையாது. ஆனால் தலைசுற்று, கிறுகிறுப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள சிறப்பு பயிற்சிகள் இருக்கிறது. கண்களுக்கு ஓய்வு கொடுப்பதை போன்று காதுகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது. அதற்கு ஓய்வே கிடையாது. 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதனால் தான் தூங்கும் போது கூட ஏதாவது ஒரு சத்தம் கேட்டால் விழித்து கொள்கிறோம்.

ஹெட்போனில் தொடர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவதாலும், அதிக சத்தமாக வைத்து பாட்டு கேட்பதாலும், குறிப்பிட்ட மருந்து, மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவதாலும் காது நரம்புகள் வலுவிழந்து போகிறது. இதனால் காதுகளின் செவித்திறன் குறைந்து போகும். இதற்கு ஓட்டோடாக்சிசிட்டி என்று பெயர்.



தலையில் மூளைக்கு அருகில் கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் உள்ளது. அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இந்த உறுப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனால் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனருகில் இருக்கும் மற்ற உறுப்பும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பல்வலி வந்தால் தலைவலி வரும். கழுத்து வலி வந்தால் காது வலி வரும். இந்த பாதிப்பை ரெபர்டு ஆட்டாலாஜியா என்று மருத்துவம் கூறுகிறது.

காதுகள் எப்போதும் உலர்வாக இருக்க வேண்டிய பகுதி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் குளிர் காற்று, குளிர்ந்தநீர் காதுக்குள் போகக்கூடாது. அது காதின் ஆரோக்கியத்தை கெடுத்து பாதிப்பை உண்டாக்கும். அம்மை நோயை அலட்சியப்படுத்தக்கூடாது. அதனாலும் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும். உள்காதில் நீர் கோர்த்தால் காது கேட்காது. அப்போது இரைச்சல், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

காது தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது. அதற்காக காதுக்குள் ‘செரூமன்‘ என்னும் ஒருவகை திரவம் சுரக்கிறது. அந்த திரவம் காதை சுத்தப்படுத்தும். ஒரு சிலருக்கு ‘செரூமன்‘ திரவத்தால் அழுக்கு சேருவதுண்டு. அதனை அகற்ற மருத்துவரின் துணையோடு காதுக்குள் ஊசி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்ய வழி இருக்கிறது.

‘ரூபெல்லா‘ எனும் வைரஸ் கிருமி பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேட்காமல் போகும். அதற்காக முன்னெச்சரிக்கையாக வளர்இளம் பெண்களுக்கு ரூபெல்லா தடுப்பு ஊசி போடுவது நடைமுறையில் உள்ளது. இதனால் காது கேளாமை என்னும் பிறவிக்குறைபாட்டை தடுத்து விடலாம்.

அதிக சத்தமான இடி மற்றும் பட்டாசு வெடிப்பதை கேட்டால் காது சவ்வு கிழிந்து விடும். சில தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களில் இருந்து அதிக சத்தம் வரும். இதுபோன்ற அதிக சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் காதின் செவித்திறன் பாதிக்கப்படும். அதனால் அங்கு பணியாளர்கள் உள்பட அனைவரும் வருடம் ஒரு முறை செவித்திறன் குறித்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அதேபோல் குழந்தைகள் விளையாட்டாக சிறு பொருட்களை காதுக்குள் போட்டுக்கொள்வார்கள். அதனை வெளியில் சொல்லவும் தெரியாது. அதுபோன்ற சமயத்தில் பெரியவர்கள் அதனை கண்டறிந்து டாக்டரிடம் சென்று அதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்து அதனை அகற்ற வேண்டும். கையில் கிடைத்த சிறு பொருட்களை கொண்டு காதை குடையக்கூடாது. அதிக நேரம் ஒரே காதில் வைத்து செல்போன் பேசக்கூடாது. இவ்வாறு காதுகள் விஷயத்தில் அக்கறை செலுத்தினால் காதுகளை பாதுகாக்கலாம்.

நம்மிடமே இருக்கு மருந்து: பனங்கற்கண்டு!

நம்மிடமே இருக்கு மருந்து: பனங்கற்கண்டு!


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இந்தியாவில் பயன் படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருட்களுள் ஒன்று, பனங்கற்கண்டு. ஆங்கிலத்தில் இதை, 'ராக் கேண்டி' என்பர். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும்

 இது, சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத, சர்க்கரை படிகக் கற்கள். எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால், நம் உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை பயன்படுத்தலாம்.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளதால், ஆஸ்துமா, அம்னிஷியா, மூச்சுப் பிரச்னை, இருமல், சளி, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்னை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

இனி, இதை பயன்படுத்துவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

* தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா... கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும், வாய் துர்நாற்றம் காணாமல் போகும்
* சோர்வாக இருக்கிறதா... அதற்கு, அரை மேஜை கரண்டி பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும், மிகவும் சுறுசுறுப்பாக மாறி விடலாம்
* தீராத சளி இருந்தால், இரண்டு பாதாம் பருப்பு, ஒரு மேஜை கரண்டி பனங்கற்கண்டு, அரை மேஜை கரண்டி மிளகு சேர்த்து, மிக்சியில் பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும்; ஜலதோஷம் போயே போயிந்தி!
* தொண்டைக் கட்டி பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா... அரை மேஜை கரண்டி மிளகுத்துாள், அரை மேஜை கரண்டி நெய் மற்றும் அரை மேஜை கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், தொண்டை வலி குணமாகும்
* சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்; மேலும், கண்பார்வை கூர்மையாகும்
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் துாளுடன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் போதும், எந்த நோயும் அண்டாது
* இரண்டு மேஜை கரண்டி வெங்காய ஜூஸ் மற்றும் ஒரு மேஜை கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால், சிறுநீரகக் கற்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
கற்கண்டை பயன்படுத்தி, உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.

நட்சத்திர பழம்

நட்சத்திர பழம்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பழங்களின் மருத்துவப் பயன்கள் எண்ணற்றவை. உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. நட்சத்திரப் பழத்தின் மருத்துவக்
குணங்களை தெரிந்துகொள்வோம். நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.

இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹவாய், பிளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.
இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாகச் சாப்பிடலாம்.

மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.

மலச்கிக்கலைப் போக்க

ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.

மூல நோயின் பாதிப்பு குறைய

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட ஸ்டார் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.

சரும பாதுகாப்பு

மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நரம்புகள் பலப்பட

ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.

10 கிராம் ஸ்டார் பழத்தில்

கார்போஹைட்ரேட்ஸ் – 6.73 கிராம்
சர்க்கரை – 3.98 கிராம்
கொழுப்பு – 0.33 கிராம்
புரோட்டீன் – 1.04 கிராம்
பான்தோதினிக் அமிலம் – .39 கிராம் %
போலேட் – 12 கிராம்
வைட்டமின் சி – 34.4 கிராம்
பாஸ்பரஸ் – 12 மிலி கிராம்
பொட்டாசியம் – 133 மிலி கிராம்
துத்தநாகம் – 12 மிலிகிராம்

ஸ்டார் பழம் தற்போது சென்னை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள பழக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஸ்டார் பழத்தை அனைவரும் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்.

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது தான் நல்லது.

இந்த கட்டுரையில், பாதாமை சரியான வழியில் சாப்பிடும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற நட்ஸ்களுடன் ஒப்பிடுகையில், பாதாம் அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. இந்த பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும்.சரி, இப்போது பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

செரிமானம் பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும்.

கெட்ட கொலஸ்ட்ரால் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

உயர் இரத்த அழுத்தம் நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

எடை குறையும் பாதாமில் மோனோ அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

முதுமையைத் தடுக்கும் நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.

இரத்த சர்க்கரை அளவு பல ஆய்வுகளில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

புற்றுநோய் குறிப்பு ..

ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது. எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

பிறப்பு குறைபாடுகள் கர்ப்பிணிகள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் ஃபோலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். ஃபோலிக் அமிலம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்.

யோகா அல்ல ஓகம் - (OGAM - ஓகக்கலை)

யோகா அல்ல ஓகம் - (OGAM - ஓகக்கலை)
 (OGAM - not Yoga)


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்! தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம்!!

இத்தனை காலங்கள் நம்முடைய கலைகளை வடநாட்டு ஆரியர்கள் சமஸ்கிருத பெயர் சூட்டி அவர்கள் கலைகளாகவே மாற்றினர்.

தமிழகத் தமிழர்களும் இந்த ஓகக் கலைகள் யாவும் தமிழர்களுடைய கலைகள் அல்ல அவை ஆரியக் கலைகள் என்றே நம்பி வந்தனர்.

அதனால் இக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்க எந்த நடவடிக்கையும் தமிழ் ஆசிரியர்களே எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம்.

மேலும் சமஸ்கிருத மொழியில் ஓகக் கலைகளை சொல்லிக் கொடுப்பது தான் மேன்மையான அறிவு என்றும் கருதினர்

சில தமிழ் ஆசான்கள்.
தமிழில் சொல்லிக் கொடுத்தால் அது எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் அதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருதினர்.

ஆரியர்களும் அவ்வாறே புரியாத மொழியில் ஓகக் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர்.

அதனால் ஒட்டுமொத்த ஓகக் கலைகளுக்கும் தாங்கள் தான் உரிமைதாரர்கள் என்றும் கூறிவருகின்றனர் ஆரிய மதத்தினர்.

இந்நிலையில் தமிழ்நெறி வாழ்வியல் ஆசான் திரு. குப்பு அசித்தர் தமிழர்களின் ஓகக் கலைகளின் பெயர்கள் முழுவதையும் இப்போது மீட்டு நமக்கு தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழர்கள் யாவரும் இனி ஓகக் கலைகளை தங்கள் தாய்மொழியிலேயே எளிதில் பயிலலாம்.

இக்கலைகள் குறித்த ஐயங்களை திரு குப்பு அசித்தர் அவர்களை தொடர்பு கொண்டும் தெளிவடையலாம்.

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான பிற மொழிப் பெயர்கள் பட்டியல்
தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்:-

1. ஞாயிறு வணக்கம் - சூரிய நமசுகாரம் - SALUTE TO THE SUN

2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் - SALUTE THE SUN ON ONE LEG

3. அரை நிலாவிருக்கை - அர்த்த சந்திராசனம் - CRESCENT POSTURE

4. மலையிருக்கை - மேரு ஆசனம் - MOUNTAIN POSTURE

5. மலை நிமிர்வு இருக்கை - தாடாசனம் - MOUNTAIN ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் - PLANTS

6. தாமரை இருக்கை - பத்மாசனம் - LOTUS POSTURE

7. எழும்பு தாமரை இருக்கை - உத்தித பத்மாசனம் - RAISED LOTUS POSTURE

8. பூட்டிய தாமரை இருக்கை - பத்த பத்மாசனம் - LOCKED LOTUS POSTURE

9. நாணல் முதுகு இருக்கை - பச்சிமோத்தாசனம் - BACK ERECTING POSTURE

10. மரவிருக்கை - டோலாசனம் - TREE POSTURE

11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / - பாத அசுதாசனம் - HAND AND FOOT POSTURE
விலங்கு - CREATURES
நீர் உயிரிகள் - AQUATICS

12. தவளை இருக்கை - பெக்காசனம் - FROG POSTURE

13. மீன் இருக்கை - மச்சாசனம் - FISH POSTURE

14. சுறவம் இருக்கை - மகராசனம் - SHARK POSTURE

15. முதலை இருக்கை - மக்கராசனம் - CROCADILE POSTURE

16. சங்கு இருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை - வக்ராசனம் - SEA SHELL POSTURE

17. ஆமை இருக்கை - கூர்மாசனம் - TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் - HAND STRETCHED TORTOISE POSTURE
ஊர்வன - REPTILES

19. தேள் இருக்கை - விருச்சிக ஆசனம் - SCORPION POSTURE

20. பாம்பு இருக்கை - புசங்காசனம் - SERPENT POSTURE
நடப்பன - VERTEBRATE

21. ஆமுகவாய் இருக்கை - கோமுகாசனம் - COW FACE POSTURE

22. ஆவினிருக்கை - கோவாசனம் - COW POSTURE

23. பூனை இருக்கை - பில்லியாசனம் - CAT POSTURE

24. ஒட்டகவிருக்கை - உசர்ட்டாசனம் - CAMEL POSTURE

25. நாய்முக இருக்கை - அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE

26. புலி இருக்கை - வியாகராசனம் - TIGER POSTURE

27. அரிமா இருக்கை - சிம்மாசனம் - LION POSTURE

28. மிடுக்கான குதிரை இருக்கை - கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA

29. முயல் இருக்கை - சசாங்காசனம் - RABBIT POSTURE

30. நரி இருக்கை - மார்சரி ஆசனம் - FOX POSTURE
பறப்பன - AVES & INSECTS

31. வெட்டுக்கிளி இருக்கை - சலபாசனம் - GRASSHOPPER (LOCUST) POSTURE

32. அரை வெட்டுக்கிளி இருக்கை - அர்த்தசலபாசனம் - SEMI GRASSHOPPER POSTURE

33. மயிலிருக்கை - மயூராசனம் - PEACOCK POSTURE

34. புறாவிருக்கை - கப்போட்டாசனம் - DOVE POSTURE

35. பறக்கும் புறாவிருக்கை - உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE

36. கொக்குவிருக்கை - பக்காசனம் - CRANE POSTURE

37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை - ஏகபாத பக்காசனம் - SINGLE FOOTED CRANE POSTURE

38. கலுழன் இருக்கை - கருடாசனம் - EAGLE POSTURE

39. சேவல் இருக்கை - குக்குடாசனம் - COCK POSTURE

40. நிற்கும் மயிலிருக்கை - கடுடா மயூராசனம் - STANDING PEACOCK POSTURE

41. வாத்து இருக்கை - அம்சாசனம் - DUCK POSTURE

நடனம் - DANCE
42. நடன இருக்கை - நடனாசனம் - POSTURE OF NATARASA

43. களிக்கூத்து - ஆனந்த தாண்டவம் - PLEASURE DANCE POSTURE

44. கூத்தரசன் இருக்கை - நடராச ஆசனம் - KING OF DANCE POSTURE

45. வீர அடைவு இருக்கை - வீர அனுமான் ஆசனம் - BRAVE STEP POSTURE
1முத்திரை - GESTURE

46. ஓக முத்திரை - யோகமுத்ரா - OGAM GESTURE

47. பெரு முத்திரை - மகாமுத்ரா - GREAT GESTURE

48. படையல் முத்திரை - அஞ்சலி முத்ரா - HOMAGE GESTURE

49. குதிரை மலவாய் முத்திரை - அசுவினி முத்ரா - HORSE’S ANAL GESTURE

50. ஆறுமுக முத்திரை - சண்முக முத்ரா - HEXAGON GESTURE

கருவிகள் - TOOLS :-

51. நாற்காலி இருக்கை - உட்கட்டாசனம் - CHAIR POSTURE

52. அரசரிருக்கை - பூரண உட்கட்டாசனம் - THRONE POSTURE

53. சக்கரவிருக்கை - சக்ராசனம் - WHEEL POSTURE

54. அரைசக்கரவிருக்கை - அர்த்தகடி சக்கராசனம் - SEMI WHEEL POSTURE

55. வில்லிருக்கை - தனுராசனம் - BOW POSTURE

56. காதருகுவில்லிருக்கை - ஆகர்ண தனுராசனம் - EXTENDED BOW POSTURE

57. படகிருக்கை / நாவாய் இருக்கை - நவாசனம் - BOAT POSTURE

58. முக்கோணவிருக்கை - திரிகோனாசனம் - TRIANGLE POSTURE

59. பரிமாற்ற முக்கோணவிருக்கை - பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE

60. கலப்பை / ஏர் / உழவிருக்கை - அலாசனம் - PLOUGH POSTURE

தொழில் - ACTIVITIES :-

61. வழிபாட்டிருக்கை - சசாங்காசனம் - WORSHIP POSTURE

62. வீரவிருக்கை - வீராசனம் - BRAVE POSTURE

63. நெற்றிக்கண் வழியன் இருக்கை - வீரபத்ராசனம் - GLABELLA VIEW POSTURE

64. அம்மி அரைக்கும் இருக்கை - உபவிசுட்டகோணாசனம் - GRINDING POSTURE

65. காலணிதையலிருக்கை - பத்ராசனம் - SHOEMAKER POSTURE

66. தேரோட்டி இருக்கை - சாரதாசனம் - CHARIOT RIDER POSTURE

67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / - சானுசீராசனம் - HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.

உடல் உறுப்புகள் - ORGANS OF HUMAN BODY :-

68. இணை காலடி இருக்கை - சமபாதாசனம் - PARRALLEL FOOT POSTURE

69. ஒரு காலூன்றி இருக்கை - நின்ற பாதாசனம் - SINGLE LEG POSTURE

70. கோண இருக்கை - கோணாசனம் - ANGLED POSTURE

71. விலாப்பக்க கோண இருக்கை - பார்சுவ கோணாசனம் - RIBSIDE ANGLED POSTURE

72. மண்டிவல்லிருக்கை - வச்சிராசனம் - FIRM KNEELING POSTURE

73. மழலை இருக்கை - பாலாசனம் - CHILD POSTURE

74. கிடைநிலை வல்லிருக்கை - சுப்த வச்சிராசனம் - SUPINE ANKLE POSTURE

75. குந்தி கைகூப்பு இருக்கை - உட்கட்டாசனம் - PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD

76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் - OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE

77. மாற்று அமர் இருக்கை - அர்த்தமத்ச்யேந்தராசனம் - CONTRA SITTING POSTURE

78. பூட்டிய கோணவிருக்கை - பத்தகோணாசனம் - LOCKED ANGLE POSTURE

79. நீள்காலடி இருக்கை - உத்தான பாதாசனம் - RAISED FOOT ERECT

80. ஓகத்துயில் - யோக நித்ரா - OGAM SLEEP

81. அரை உடல் இருக்கை - விபரீதகரணி - HIP STAND POSTURE

82. முழு உடல் இருக்கை - சர்வாங்காசனம் - SHOULDER STAND

83. பாதி முழு உடல் இருக்கை - பர்வதாசனம் - SEMI SHOULDER STAND

84. மேடை இருக்கை - பீடாசனம் - STAGE POSTURE

85. பகுதலை இருக்கை - அர்த்த சிரசாசனம் - SEMI INVERTTED

86. தலை இருக்கை - சிரசாசனம் - INVERTTED POSTURE

தூய்மை - CLEANSING :-

87. வளிகழித்தலிருக்கை - பவன முக்தாசனம் - WIND RELEASING TECHNIQUE

88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை - உட்டியானபந்தம் - FLYUP LOCK

89. குடல் சுழற்றியிருக்கை - நௌலி - BOWEL CIRCULATING POSTURE

90. மூச்சொழுக்கம் - பிராணாயாமம் -
ORDER OF BREATH

91. தலை தூய்மை - கபாலபாதி - CLEANSING OF BRAIN

92. துருத்தி மூச்சு - பசுதிரிகா - BELLOW BREATH

93. சீழ்க்கை - சீத்காரி - WHISTLING

94. நீர்த் தூய்மை - சலநேதி - WATER CLEANSING

95. குளிர் சீழ்க்கை - சீத்தளி - COOL WHISTLE

96. மூலக்கட்டு - மூலபந்தம் - ANAL CONTRACTION

97. நாடித் தூய்மை - நாடி சுத்தி - CLEANSING OF PULSE

98. தேனீ ஒலி - பிராமரி - HONEY BEE HISSING

99. கண் தூய்மை - திராடகா - EYE CLEANSING

100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் - சதந்தா - INHALING THROUGH CLEANCHED TEETH

101. உள் மூச்சு - அனுலோமம் - INHALING

102. வெளி மூச்சு - விலோமம் - EXHALING

103. தொண்டை ஒலி - உச்சயி - HISSING OF PHARYNX

நிறைவு நிலை - PACIFICATION :-

104. இயல்பிருக்கை - சுகாசனம் - AT EASE POSTURE

105.. அமைதி இருக்கை - சவாசனம், - LYING RELAX POSTURE

நாடி சுத்தி என்றால் என்ன - எப்படி செய்வது?

நாடி சுத்தி என்றால் என்ன - எப்படி செய்வது?


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இது மிகப் பெரிய விஞ்ஞானம் ...

நாடி சுத்தி தரும் அற்புத  அனுபவம்

நாம் மிகவும் மேலோட்டமாக தான் மூச்சு விட்டு கொண்டிருக்கிறோம்.

Oxygen நுரையீரலின் உட்பகுதி வரை சென்று சேர்வதை நாம் சரியாக செய்வது இல்லை.

இடப்பக்கம் வலப்பக்கம் உள்ள நுரையீரல்களுக்கு சரியாக oxygen சென்று சேர்வது இல்லை.
...
இரண்டாவது, நாம் மேலோட்டமாக மூச்சு விட்டு விட்டு நுரையீரலை சுருக்கி வைத்துவிட்டோம்.

அதை விரிவடைய செய்ய நாடி சுத்தி செய்தாக வேண்டும்.

அதைச் செய்த பின்னர் பிராணாயாமம் செய்யும் பொழுது 100% oxygen நுரையீரலுக்கு எடுத்து செல்கிறோம்.

நாடி சுத்தி எப்படி செய்வது?

1. முதலில் உங்கள் மூச்சு காற்றை நன்றாக வெளியேற்றி விடுங்கள்.

2. இப்போது உங்கள் 2 நுரையீரலில் மூச்சுக் காற்று இல்லை.

3. இப்போது உங்கள் வலது கட்டை விரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது மூக்கு வழியாக காற்றை உள் இழுங்கள்.

4. இழுப்பதற்கு 8 நொடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. முழுமையாக உள்வாங்கிய பிறகு, உங்கள் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் கொண்டு இடது நாசியை அடைத்து கொண்டு, மிக மிக மிக மெதுவாக இழுத்த காற்றை வலது நாசி வழியாக வெளியே விடுங்கள்.

6. இப்படி வெளியே விடுவதற்கு 16 நொடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

7. முழுமையாக வெளியே விட்ட பின், அதே வலது நாசி வழியாக 8 நொடி காற்றை உள் இழுக்க வேண்டும்.

8. எட்டு நொடிகள் வலது நாசியில் உள்ளிழுத்த காற்றை, கட்டை விரலால், வலது நாசியை அடைத்துக் கொண்டு, இடது நாசி வழியாக மிக மிக மெதுவாக 16 நொடிகளில் வெளிவிட வேண்டும்.

9. இந்த ஒரு cycle தான் ஒரு சுத்து நாடி எனப்படும்.
...
இதை 4 சுற்றுகள் செய்தால், "நாடி சுத்தி" செய்தது ஆகும்.
...
முதலில் 4 சுற்று செய்யுங்கள்.. படிப்படியாக 8 சுற்று செய்யுங்கள்... நிறைய நேரம் எடுக்கும்... பொறுமை வேண்டும்...

உடலின் கழிவுகளை வெளியேற்ற சில குறிப்புகள்

உடலின் கழிவுகளை வெளியேற்ற சில குறிப்புகள்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது. அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது

*⚡உடலின் கழிவுகளை அகற்ற⚡*

1. உப்பு
2. புளி
3. வெள்ளை சர்க்கரை
4. வெங்காயம், பூண்டு
5. ஆங்கில மருந்து
6. கெமிக்கல் உணவு
7. உருளைக்கிழங்கு
8. அசைவ கொழுப்பு
9. பால் பதார்த்தங்கள்
10. பச்சை, வர மிளகாய்
11. ரீபைண்டு ஆயில்
12. மைதா, முட்டை

மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ? என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்த மகத்துவம் உண்டு.

*⚡எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உண்டு பயன் பெறவும்⚡*

*உப்பை வெளியேற்றும் விதி⚡*

தீர்வு : காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும்.

*⚡புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி⚡*

தீர்வு : ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

*⚡வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி⚡*

தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும்.

*⚡வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி⚡*

தீர்வு : காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும் நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

*⚡கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நஞ்சை உடலிருந்து வெளியேற்றும் விதி⚡*

காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும்.

*⚡கடைகளிலும், பாக்கெட்டிலும் உள்ள கெமிக்கல் கொண்ட உணவு மற்றும் முக்கியமாக அரிசியில் கலந்துள்ள நஞ்சை வெளியேற்றும் விதி⚡*

தீர்வு : இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதையுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பருகவும்.

*⚡உருளைக்கிழங்கால் குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்றும் விதி⚡*

தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் விதை ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும்.

*⚡நார்சத்தே இல்லாத அசைவ உணவானது குடலில் ஒட்டுக்கொண்டு வராமல் கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி⚡*

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும்.

*⚡அதிகமாக பால், தயிர், மோர் மற்றும் பால் பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி⚡*

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை முற்றிய முருங்கை விதை இரண்டை உணவுக்கு பின் 15 நிமிடம் சப்பி விட்டு இறுதியில் மென்று முழுங்கவும்.

*⚡பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகிய இரண்டின் உபயோகித்தல் ஏற்பட்ட இழப்பை மாற்றி மீண்டும் உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் விதி⚡*

தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

*⚡உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலை உட்கொண்டதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. அதனை வெளியேற்றும் விதி⚡*

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து பருகவும்.

*⚡மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி⚡*

தீர்வு : காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொருமையாக சப்பி குடிக்கவும்🔵🔴

சேப்பகிழங்கு கீரை

சேப்பகிழங்கு கீரை


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சேப்பகிழங்கு, கிழங்கு, யானை கால் செடி என பலப்பெயர்களில் அழைக்கபடுகிறது இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.

உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது. இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...

இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம் விரும்புபவர்கள் யாரும் இல்லை.

சேப்பகிழங்கில் ஆயிரம் வகை உள்ளது..

இதன் இலையை பொருத்து கிழங்கு வகைபடுத்தபடுகிறது.

சேப்பகிழங்கில் புரதம் கொழுப்பு தாது உப்புகள், நார்சத்து மாவுச்சத்தும், காணப்படுகின்றன.

சேப்பங்கீரை இலைச்சாற்றை விந்தணு பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் தர விந்து கட்டும்.

இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

இந்த கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் நீங்கும்.

இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள மேக சாந்தி குணமடையும்.

மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும்.

குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரையின் சாற்றைப் பூச நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.

சேப்பகிழங்கு கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது.

இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது.

இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களுக்குப் பூச விரைவில் காயங்கள் ஆறும்.

தசைநார்களை வேகமாக வளரச் செய்யும்.

இந்த இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் இரத்தக் காயங்களின் மீது பூச இரத்தம் ஒழுகுவது நிற்கும்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுக்க வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும்.

கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில் நெய் கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும்.

காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிர்க்கு கீரை சாற்றினை இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும்.

துரியன் பழத்தின் நன்மைகள்

துரியன் பழத்தின் நன்மைகள்


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது.

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர்.

போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் என பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது-. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் மரத்தின வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் சுரவெதிரியில் இருந்து குணம் பெறலாம். துரியன் பழத்திலுள்ள  பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது. கருப்பை பலவீனமாக இருப்பவர்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

 கருப்பை பலம் பெறும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.இந்த பழத்தில் கொண்டுள்ள பாஸ்பரஸ் பல் சுகாதாரத்திற்கு உதவுகிறது.

துரியன் பழத்தில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான வைட்டமின் சி உள்ளதால் முதிர்ச்சியை தடுத்து இளமையை தக்க வைத்துக்கொள்கிறது.

துரியன் பழம் பைரிடாக்சின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.. உடலில் ஏற்படும் கட்டிகளை தடுக்கிறது.

காப்பர் மற்றும் ரிபோப்லாவின் கொண்டுள்ளதால் தைராய்டை பராமரித்து ஒற்றைதலைவலிக்கு நிவாரணம் அளித்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது.

துரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. தயாமின் மற்றும் நியாமின் கொண்டுள்ளதால் பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது.

வயிற்றுப் புழுக்களை வெளியேற்றி குடற்புண்களை ஆற்றும் சுண்டைக்காய் !

வயிற்றுப் புழுக்களை வெளியேற்றி குடற்புண்களை ஆற்றும் சுண்டைக்காய் !

        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு  ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை  சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள்  உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின்  உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. இவை மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.  குடற்புண்களை ஆற்றும்.

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும். சுண்டைக் காயை உப்பு  கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல், காச நோய்  குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி  2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.