உங்கள் நாக்கு என்ன உடல்நலம் பற்றி சொல்கிறது?

உங்கள் நாக்கு என்ன உடல்நலம் பற்றி சொல்கிறது?




அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அது போல நமது உடலின் ஆரோக்கியத்தை நமது நாக்கின் மூலம் அறிந்து கொள்ள முடியும். நாக்கில் தோன்றும் ஒரு சில அறிகுறிகளின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை அறிய முடிகிறது. அது எப்படி என்று இந்த பகுதியில் காணலாம்.

வெள்ளை திட்டுக்கள் வாய் புண், ஒரு இயற்கையாக வளரும் பூஞ்சை வளர்ச்சி. நோயெதிர்பு மண்டலம் பாதிப்டையும் போது அடிக்கடி தோன்றும். குழந்தைகள், புற்றுநோயாளிகள், எச்.ஐ.வி மற்றும் பிற நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இரத்தசோகை மற்றும் சர்க்கரை நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் வாய் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வாய் புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆண்டிபயோடிக்குகள் கூட இந்த தாக்குதலுக்கு வழிவகுக்கலாம். Loading ad வெண்ணெய் புள்ளிகள் - நாக்கில் சிவப்பு சூழ்ந்த வெள்ளைப்புள்ளி, வெண்ணெய் புள்ளியாக இருக்கலாம். வெண்படல்- வெள்ளை அல்லது சாம்பல் நிற படலம் வெண்படல் என்று அழைக்கப்படுகிறது.

கரும்படலம் ஈஸ்ட் இன்பெக்சன், புற்றுநோய் சிகிச்சைகள், சர்க்கரை நோய், அல்லது மோசமான வாய் சுகாதாரம். ஒரு இடத்தில் கருமை படர்ந்தால் நாக்கு முழுவதும் கருமை படரும் வாய்ப்புகள் உண்டு. மது, புகையிலை, ஆண்டிபயோடிக் அதிகமாக உபயோகிக்கும் போது சிறிய கருப்பு புள்ளிகள் நாக்கு முழுவதும் உருவாகும். இது ஒரும் ஈஸ்ட் இன்பெக்சன் இது நாக்கு முழுவதும் அதிகமாவதால், கரும்படலம் உருவாகிறது.

வெள்ளையான வட்டம் ஃபோலிக் அமிலம், பி12 மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டினால் நாக்கு சிவத்தல் அல்லது புவியியல் நாக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் அழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பின் போது இந்த படலத்தை சுற்றி வெள்ளையான வட்டம் இருக்கும். மேலும் அதன் இருப்பிடம் ஒவ்வொரு முறையும் இடம் விட்டு இடம் மாறும்.

சளி சவ்வுகளை பாதிக்கும் வாய்வழி லிச்சென் பிளானஸ் என்பது ஒரு நீண்டகால அழற்சி நிலை. இது வாய்க்குள் இருக்கும் சளி சவ்வுகளை பாதிக்கிறது. இது வெள்ளை, சிவப்பு, வீங்கிய திசுக்கள் அல்லது திறந்த புண்களாக இருக்கலாம். இந்த புண்கள் எரிச்சலை உண்டு செய்யலாம், வலி அல்லது பிற கோளாறுகளை உண்டு செய்யலாம்.

நாக்குகளில் அழுத்தம் பற்கள் நாக்குக்குள் அழுத்துதல் இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகவும்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அது போல நமது உடலின் ஆரோக்கியத்தை நமது நாக்கின் மூலம் அறிந்து கொள்ள முடியும். நாக்கில் தோன்றும் ஒரு சில அறிகுறிகளின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை அறிய முடிகிறது. அது எப்படி என்று இந்த பகுதியில் காணலாம்.

வெள்ளை திட்டுக்கள் வாய் புண், ஒரு இயற்கையாக வளரும் பூஞ்சை வளர்ச்சி. நோயெதிர்பு மண்டலம் பாதிப்டையும் போது அடிக்கடி தோன்றும். குழந்தைகள், புற்றுநோயாளிகள், எச்.ஐ.வி மற்றும் பிற நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இரத்தசோகை மற்றும் சர்க்கரை நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் வாய் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வாய் புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆண்டிபயோடிக்குகள் கூட இந்த தாக்குதலுக்கு வழிவகுக்கலாம். Loading ad வெண்ணெய் புள்ளிகள் - நாக்கில் சிவப்பு சூழ்ந்த வெள்ளைப்புள்ளி, வெண்ணெய் புள்ளியாக இருக்கலாம். வெண்படல்- வெள்ளை அல்லது சாம்பல் நிற படலம் வெண்படல் என்று அழைக்கப்படுகிறது.

கரும்படலம் ஈஸ்ட் இன்பெக்சன், புற்றுநோய் சிகிச்சைகள், சர்க்கரை நோய், அல்லது மோசமான வாய் சுகாதாரம். ஒரு இடத்தில் கருமை படர்ந்தால் நாக்கு முழுவதும் கருமை படரும் வாய்ப்புகள் உண்டு. மது, புகையிலை, ஆண்டிபயோடிக் அதிகமாக உபயோகிக்கும் போது சிறிய கருப்பு புள்ளிகள் நாக்கு முழுவதும் உருவாகும். இது ஒரும் ஈஸ்ட் இன்பெக்சன் இது நாக்கு முழுவதும் அதிகமாவதால், கரும்படலம் உருவாகிறது.

வெள்ளையான வட்டம் ஃபோலிக் அமிலம், பி12 மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டினால் நாக்கு சிவத்தல் அல்லது புவியியல் நாக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் அழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பின் போது இந்த படலத்தை சுற்றி வெள்ளையான வட்டம் இருக்கும். மேலும் அதன் இருப்பிடம் ஒவ்வொரு முறையும் இடம் விட்டு இடம் மாறும்.

சளி சவ்வுகளை பாதிக்கும் வாய்வழி லிச்சென் பிளானஸ் என்பது ஒரு நீண்டகால அழற்சி நிலை. இது வாய்க்குள் இருக்கும் சளி சவ்வுகளை பாதிக்கிறது. இது வெள்ளை, சிவப்பு, வீங்கிய திசுக்கள் அல்லது திறந்த புண்களாக இருக்கலாம். இந்த புண்கள் எரிச்சலை உண்டு செய்யலாம், வலி அல்லது பிற கோளாறுகளை உண்டு செய்யலாம்.

நாக்குகளில் அழுத்தம் பற்கள் நாக்குக்குள் அழுத்துதல் இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகவும்









சூட்சும விஞ்ஞானம்

சூட்சும விஞ்ஞானம்




1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது,
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

மூலிகை ரகசியம் - மருந்தில்லா மருத்துவம்

மூலிகை ரகசியம் -  மருந்தில்லா மருத்துவம்



1.மார்புச் சளி
.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

2.சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

11.தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

12.வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் போகும்.

13.உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

14.அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

15.குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

16.வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

17.வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

18.மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

19.சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

20.பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

21.மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

22.சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

23.தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

24.மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

25.தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

26.மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

27.வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்..

கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது

கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது





ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!

நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!

விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!

இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!

லட்சுமி கடாட்சம் வீடு முழுவதும் நிரம்பி வழியும் !!!

இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???

அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!

அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!
நாம் இனியும் வாழ்வோம்...

அத்திப்பழம் - மலச்சிக்கலை குணமாக்கும்

அத்திப்பழம் - மலச்சிக்கலை குணமாக்கும்




அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

1. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.

5. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள்.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?



தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

1. இளஞ்சூடான நீர்

இளஞ்சூடான நீர் - காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

2. வெந்தயம் நீர்

வெந்தயம் நீர் - வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

3. தேன்

தேன் - இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

4. காய்கறிகள்

காய்கறிகள் - கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.

5.பழங்கள்

பழங்கள் - வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள்,  தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.

அரிசிக்கஞ்சி

அரிசிக்கஞ்சி - குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

7.உளுந்தங்களி

உளுந்தங்களி - பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

8.முளைக்கட்டிய பயறு

முளைக்கட்டிய பயறு - முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை





1; பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"

2; பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர் படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூன் முதுகு விழுவதை தடுக்கிறது. கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்.

3; கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும். பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது, இடுப்பு எலும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்.

4; மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,

5; பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது. பாயில் தலையணை இல்லாமல் அல்லது லேசான தலையணை உடன் உறங்குவதே சிறந்தது.

6; ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,

7; பாய் உடல் சூட்டை உள் வாங்கக் கூடியது,

8; பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லாத ஒரு சீர்வரிசை கிடையாது,

9; ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,

10; கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்...
*உடல் உஷ்ணம்,வதையும்...

*உடலின் வளர்ச்சி,யும்...

*ஞாபக சக்தி,யையும்...

*மன அமைதி,யும்...

*நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது.

பிளாஸ்டிக் பாய் சூடு உண்டாகி ஆபத்து என்பதை உணரவும்.

பாரம்பரிய சத்தான சத்து மாவு தயாரிக்கும் முறை

பாரம்பரிய சத்தான சத்து மாவு தயாரிக்கும் முறை



இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..
இதை தயாரிக்கும் முறை:

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

தேவையான பொருட்கள்:

1.ராகி
2.சோளம்
3.நாட்டு கம்பு
4.பாசிப்பயறு
5.கொள்ளு
6.மக்காசோளம்
7.பொட்டுக்கடலை
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.தினை
11.வரகு
12.சாமை
13.கொண்டை கடலை
14.கருப்பு உளுந்து
15.சம்பா கோதுமை
16.பார்லி
17.நிலக்கடலை
18.மாப்பிள்ளை சம்பா
19.அவல்
20.ஜவ்வரிசி
21.வெள்ளை எள்
22.கசகசா
23.ஏலம்
24.முந்திரி
25.சாரப்பருப்பு
26.பாதாம்
27.ஓமம்
28.சுக்கு
29.பிஸ்தா
30.ஜாதிக்காய்
31.மாசிக்காய்

*31 வகையான தானியங்களை முளை கட்டி அரைத்த தரமான சத்துமாவு கிடைக்கும்*

செய்முறை

1. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

2.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

3.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

4.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

7.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

8.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

9.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

குறிப்பு:

6 மாதம் கெடாது.

1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

குறிப்பு :

1. 6மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்

2.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

*பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்*

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் வாரத்தின் ஐந்து நாட்களிலும் விதம்விதமாக பட்டியல்

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் வாரத்தின் ஐந்து நாட்களிலும் விதம்விதமாக பட்டியல்

ஓர் ஆரோக்கியப் பட்டியல் இங்கே…




திங்கள்: நறுக்கியப் பழத்துண்டுகள், தேனில் ஊறிய பலாப்பழம், பேரீச்சை, ஆவியில் வேகவைத்த நேந்திரம்பழம், மாதுளை முத்துக்கள், சப்போட்டாபழம், நெல்லி, சிவப்புக் கொய்யா, சீத்தாபழம், தேன் கலந்த நறுக்கிய பப்பாளி.

செவ்வாய்: அவல் லட்டு, பொரி உருண்டை, நிலக்கடலை உருண்டை, எள் உருண்டை, தினை உருண்டை, அத்திப்பழ உருண்டை, சத்துமாவு உருண்டை, கேழ்வரகு அல்வா.

புதன்: புட்டு, இலை கொழுக்கட்டை, சுண்டல், சப்பாத்தி ரோல்,
பால் கொழுக்கட்டை, உப்பு உருண்டை, பொரிவிளாங்காய் உருண்டை, கறுப்பு உளுந்து உருண்டை.

வியாழன்: காய்கறி சாலட் வகைகளை, எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து தரலாம். முளைகட்டிய தானியங்களின் கலவை.

வெள்ளி:மினி இட்லி, மினி அடை, மினி தோசை, கட்லட், மாப்பிள்ளைச் சம்பா முறுக்கு, தினை ரிப்பன் பக்கோடா, கவுனி அரிசி சீடை, அவல் உப்புமா, இனிப்பு அவல்.

பெண்கள் உதட்டின் மேல் மீசை - கவலை வேண்டாம்

பெண்கள் உதட்டின் மேல் மீசை - கவலை வேண்டாம்




உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம்.

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும.;