படியேறுங்க போதும் - உடற்பயிற்சி வேண்டாம் !

 படியேறுங்க போதும் - உடற்பயிற்சி வேண்டாம் !




அனைவருக்கும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாததால் அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.

     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

காலை நேரங்களில் நிறைய பேர் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி செய்பவர்களை பார்க்கலாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது.

நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.

‘மாடிப்படி ஏறுவதால், ரத்த அழுத்தம் குறைவதோடு கால்களுக்கும் வலுகிடைக்கிறது’ என வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி(North American Menopause Society (NAMS) தன் ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளது. வயதாவதால் தசைகள் பலவீனமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், வயதோடு தொடர்புடைய உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன.

இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அல்லாமல் தசைகளை வலுப்படுத்தக்கூடிய, அதேநேரத்தில் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையான ஏரோபிக் மற்றும் ரெஸிஸ்டன்ஸ் கலந்த பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அலுவலகங்கள், வீடு, ஷாப்பிங் மால் என எங்கே சென்றாலும் படிகள் ஏறுவதற்கு லிஃப்ட், எஸ்கலேட்டர் வசதிகளை பயன்படுத்தாமல், படிகளில் ஏறுவதை வழக்கமாக பின்பற்றுவதால், இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்வதால் ஏற்படும் ஒருமித்த பலன்களைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு.

மேலும், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இதயத்தின் ரத்தநாளங்கள் இறுக்கமடைவது, மூட்டு இணைப்புகளில் நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் அடைந்த பெண்களை, ஒரு நாளுக்கு 5 முறை 192 படிகள் ஏற வைத்து 4 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டு ஆராய்ந்ததில், அவர்களிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர்.

முல்தானி மெட்டி மாஸ்க் - Multani Mitti Face Mask

முல்தானி மெட்டி மாஸ்க்  - Multani Mitti Face Mask

சருமத்தை பிரகாசமாக்கும் முல்தானி மெட்டியை பயன்படுத்துவது எப்படி?
multani-mitti-face-pack

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

முல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் தான் முல்தானி மெட்டி. இதைக் கொண்டு ஒருவர் தங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகள் வராலும் தடுக்கலாம். ஏனெனில் முல்தானி மெட்டியில் சரும பிரச்சனைகளைப் போக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

* ஒரு சிறிய பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின், நீரால் கழுவுங்கள். * இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

* 1 டேபிள் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன், தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் சரிசமமாக தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் வெள்ளையாகலாம்.

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படும்.

பெண்களின் தாழ்வு மனப்பான்மை போக்க சில வழிகள் - Girl's Inferiority Complex

பெண்களின் தாழ்வு மனப்பான்மை போக்க சில வழிகள் -
Girl's Inferiority Complex

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தாழ்வு மனப்பான்மை தேவையற்றது. இது மனிதர்களை சோர்வடையச் செய்துவிடும். மேலும் அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளி வராமல் தடுத்துவிடும்.

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான் நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும் அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை…

5. உங்களுக்கு எதுவும் தெரியாது எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்… இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்..

குழந்தைகள் விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள் - Kids Thumb Sucking Habit

குழந்தைகள் விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள் -
Kids Thumb Sucking Habit


குழந்தை பருவத்தில் வாயில் விரல் சூப்புவதால் பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும்; விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளும் ஏற்படுகிறது. நம்மில் பலருக்கு நிகழந்த இந்த உடல் மற்றும் மன மாற்றங்கள் நம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் விரல் சூப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.

இந்த பழக்கம் குழந்தையின் தனிமை, பசி உணர்வு காரணமாகவும் அவர்களில் ஏற்படலாம். குழந்தைகள் இவ்வாறு விரலை சூப்பிக் கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்; இப்பொழுது குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைப்பதால், பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

குழந்தைகள் தனது வளரும் குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைத்து உறங்குவது, எப்பொழுது பார்த்தாலும் விரலை வைத்துக் கொண்டே திரிவது, அவர்கள் வளர்ந்த பின் பால் பற்கள் முளைத்து, அவை விழுந்து பின்னர் பற்கள் முளைக்கும் பொழுது ஒரு வரிசையில் அல்லாமல், ஏறுமாறாக கோணலாக, எத்து பல்லாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்படி வளர்ந்த பற்களில் அத்தனை பலம் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

குழந்தையாய் இருந்து சிறுவர் பருவத்திலும் கூட சூப்பிய கையை எடுக்காமல் குழந்தை வளர்ந்தால், பின்னர் குழந்தையின் கையில், விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து அதனால் அவ்வுறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணர்வற்று போகும் நிலை உருவாகலாம். இந்த விளைவால் குழந்தைகளின் முக்கிய உறுப்பான கைகள் மற்றும் அவற்றின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன.

குழந்தைகள் பிறந்ததில் இருந்து கடைபிடிக்கும் பழக்கத்தை பள்ளி சென்ற பின்னும் மேற்கொண்டால், அங்கு மற்ற குழந்தைகளின் ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகும் பொழுது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் குழந்தை வாயில் எதையாவது வைத்து வளர்த்து பழக்கப்பட்டு விட்டதால், வளர்ந்த பின் வாயில் வைக்க எதையாவதை தேடும்; அந்த சமயத்தில் புகைபிடித்தல், மது, போதை போன்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது போன்று பற்பல பாதிப்புகள் குழந்தையின் ஒரு சிறிய பழக்க வழக்கத்தால், விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து, பின்னாளில் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆகையால், குழந்தைகளுக்கு இந்த பழக்கம் ஏற்படும் சிறு வயதிலேயே அவர்களுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்து சொல்லி வாயில் கையை வைத்து வளர விடாமல் தடுக்க வேண்டும்.

 அதே சமயம் அவர்களின் உணர்வுகள் அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும் பய மற்றும் பாதுகாப்பு உணர்வுகள் குறித்து எந்தவித பாதிப்புகளும் குழந்தைகளிடம் ஏற்படாத வகையில், அவர்களை இந்த விரல் சூப்பும் பழக்கத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிகழ்காலத்தில் அவர்கள் மனம் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்கும் வகையில் அன்பாய் எடுத்து சொல்லி குழந்தைகளை திருத்துவது பெற்றோரின் கடமையாகும். 

உடையாத நீளமான நகங்கள் (Long Nails) வேண்டுமா?

உடையாத நீளமான நகங்கள் (Long Nails) வேண்டுமா?
simple-steps-you-need-to-stretch-long-nails


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.

சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர உங்களுக்கு எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.

தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகும் முன் தடவி வாருங்கள். நகங்கள் ஊட்டம் பெறும். உங்களுக்கு கடினமான நகங்கள் இருந்தால், ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி நீவி விட்டால் மென்மையாக மாறிவிடும்.

கால் விரல்களில் சிலருக்கு சொத்தை ஏற்படும். கைகளில் கூட உண்டாகும். இதற்கு சிறந்த தீர்வு ரோஸ் வாட்டரை நகங்களுக்கு தடவி வாருங்கள். சொத்தை நகம் கீழே விழுந்து, புதிய நகம் முளைக்கும். இது தவிர நகங்கல் உடையாமலிருக்க கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்துங்கள்.

தேவையானவை :

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன்
லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெய் - சில துளிகள்

பாதம் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் எலுமிச்சை சாறை விடவும். பின் வாசனை எண்ணெயை கலந்து ஒரு பஞ்சினால் நகத்தில் தேய்க்கவும். வாரம் 3 நாட்கள் இப்படி செய்யுங்கள். நகங்கள் உடையாது. பலம் பெறும். வேகமாகவும் வளரும்.

உங்கள் நகங்கள் ஆரோக்கியத்தின் குறியீடு. நகத்தின் ஓரங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கூட அது ரத்த நாளங்களை எளிதில் சென்றடையும். ஆகவே அடிக்கடி நெயில் பாலிஷ் போடாமல் நகத்தின் இடுக்களை சுவாசிக்க விடுங்கள். இயற்கையான மருதாணியை அரைத்து போடுவதால் நகங்களில் உண்டாகும் பாதிப்புகள் மறைந்துவிடும்.

குழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறா?

குழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறா?
women-wear-postpartum-belt

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, பெல்ட் போடுவார்கள். குழந்தை பிறந்ததும் பெல்ட் போடுவது தவறானது.

கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை… உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவடையும். குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலைக்கு வர நாளாகும்.

இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற்றைப் பார்த்தால் இன்னொரு பாப்பா உள்ளே இருக்கும் போலிருக்கே…’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு.

இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போட வேண்டும் என்று பல வீடுகளில் இன்னும்கூட சொல்கிறார்கள். பெல்ட் போட்டால் இந்நிலை உடனே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?

குழந்தை பிறந்தவுடன் அதுவரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடுவதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற்படாது. தளர்ந்து போன வயிற்றுத் தசைகள் மேலும் தளர்ந்து போகாமல் இருக்க, சரியான அளவிலான பேண்டீஸ் (Panties) அணிந்தாலே போதும்.

அதனால், வயிற்றை அதன் இயல்புப்படியே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.

குழந்தை சரும நோய்கள் - Child Skin Problem

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சரும நோய்கள்
common-children-skin-problems


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தை தோலின் இந்த பலவீனமான தன்மை காரணமாக, பல்வேறு வகையான தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 7 சரும பிரச்சனைகளை பார்க்கலாம்.

குழந்தை தோலின் இந்த பலவீனமான தன்மை காரணமாக, பல்வேறு வகையான தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக அந்த நோய்களை பற்றி தெரிந்துகொள்வது சிறந்தது. எனவே அந்த நோய்களை பற்றியும் குழந்தைக்கு அவை வந்தால் செய்ய வேண்டிய சிகிச்சைகள் பற்றியும் நீங்கள் நன்கு அறிவீர்கள். மேலும் நோயின் தீவிரத்தையும், அதை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமெனவும் அறிவீர்கள். பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 7 சரும பிரச்சனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வேர்க்குரு:

இது முகம், கழுத்து, பின்புறம், அல்லது அடிவயிற்றில் அதிகமாக காணப்படும். இது மில்லியாரியா என்றும் அழைக்கப்படுகிறது, சிறிய சிவப்பு புடைப்புகள் வடிவத்தில் இது காட்சியளிக்கும். சூடான வானிலை அல்லது சூடான ஆடைகள் போன்ற பல்வேறு காரணங்களாலும் உங்கள் குழந்தையின் உடல் சூடு காரணமாகவும் இது ஏற்படுகிறது. நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது உங்கள் குழந்தையை வெப்பத்திலிருந்து வெளியேற்றுவது அல்லது உங்கள் குழந்தையின் உடலுக்கு ஒட்டாத சில தளர்வான ஆடைகளை அணிவிக்க வேண்டும். இது வெடிப்புகளை குறைக்க உதவுகிறது.

குழந்தை முகப்பரு:

இந்த சிறிய முகப்பருக்கள் அதிகளவு எரிச்சலூட்டும் என்று யார் அறிவார்கள்? இது நீங்கள் நினைப்பதை விட சாதாரணமானது. இது பொதுவாக சிறிய பருக்கள் அல்லது வெள்ளை நிறத்தில், உங்கள் குழந்தையின் முகம், கழுத்து மற்றும் கன்னத்தில் ஏற்படும். இவற்றை அவற்றின் ஆரம்ப காலத்திலேயே குணப்படுத்தப்பட வேண்டும், முடிந்தளவு இரசாயனம் கலக்காத குணப்படுத்த கூடிய எதிர்ப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்.

அம்மை:

தடுப்பூசி போட்டாலும் உங்கள் குழந்தைக்கு அம்மைநோய் வர வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பருவத்தில் இது வருவது சாதாரணம் தான். அதுமட்டுமல்லாமல் இதனை மருத்துவரீதியாக எளிதில் குணப்படுத்தலாம். அம்மை நோய் பொதுவாக சிவப்பு கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் வடிவில் வெளிப்படுகிறது. இது காய்ச்சல், பசியின்மை, குமட்டல், மற்றும் தசை வலிகள் ஆகியவற்றால் கூட ஏற்படலாம். இது ஒரு தொற்றுநோயாகும். ஒருவருக்கு ஏற்கனவே அம்மை வந்து குணமாகி இருந்தால் மீண்டும் அம்மை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

எக்ஸிமா:

எக்ஸிமா என்பது தோலின் சில பகுதிகளில் மட்டும் அரிப்பு, கொப்புளங்கள், இரத்த கசிவு போன்றவை ஏற்படும் நிலையாகும். இது கைகள், முகம், கழுத்து, முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் ஏற்படலாம். இது 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பே ஏற்படலாம் மற்றும் சூடான வானிலை, குளிர் காலநிலை, சில சோப்புகள், சில துணிகள், போன்ற பல காரணிகள் இது ஏற்பட காரணமாகின்றன. இதை குணப்படுத்துவதற்கு ஈரத்துணியை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக தேய்த்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும், பின் தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பயன்படுத்தலாம்.

குளிர் புண்கள்:

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குளிர் புண்கள் மிகவும் பொதுவானவை. இவை வாய்வழி பகுதியில் கொப்புளங்கள் வடிவில் உருவாகின்றன, அவை பின்னர் வலுவான புண்களாக மாறும். இது வீங்கிய ஈறுகளில் தொடங்கி வாயின் அனைத்து பகுதிகளையும் தாக்கும். இதனால் வீக்கம் ஏற்படுவதுடன் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம். இந்த புண்கள் 5-10 நாட்கள் வரை நீடிக்கும். பின்னர் அவை மறைய தொடங்கும். இதனால் பசியின்மை, தாகமின்மை ஏற்படலாம், ஆனால் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கை, கால் மற்றும் வாய் நோய்

இந்த நோய் கொப்புளங்கள், தொண்டை புண், மற்றும் லேசான காய்ச்சல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. பெயரில் குறிப்பிடுவதுபோல், கொப்புளங்கள் உடலின் கை, கால் மற்றும் வாய்க்குரிய பகுதிகளில் உடைந்து போகின்றன. மேலும் இவை குழந்தைகளின் கீழ்புறத்தை நோக்கி பரவுகின்றன. இந்த புண் வந்தால் சாப்பிடுவதும், குடிப்பதும் மிகவும் சிரமமாகிவிடும். குழந்தைகள் மருத்துவரை விரைவில் அணுகி சரியான மருந்துகளை உபயோகியுங்கள், குழந்தையின் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

விழி வெண்படல அழற்சி:

குழந்தைகளுக்கு பெருமளவில் ஏற்படும் நோய் இதுவாகும். இது பாக்டீரியா, ஒவ்வாமை, அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும்  நோய்த்தொற்று ஆகும். இதனால் கண்ணீரில் இளஞ்சிவப்பு நிற ஒட்டும் தன்மை கொண்ட நீர் வெளியேறும். இதனால் கண்கள் சிவப்பாகவும் விழித்திரை மஞ்சள் நிறத்திலும் மாறும். இந்த தொற்றுநோயிலிருந்து குழந்தையை பாதுகாக்க விரைவில் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

தர்பூசணியின் மருத்துவ பயன்கள்

தர்பூசணியின் மருத்துவ பயன்கள்

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வெயிலுக்கு தர்பூசணி மிகவும் உகந்தது. இப்பழத்தில் வைட்டமின் அதிகம் நிறைந்துள்ளது.
நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். வயிற்று வலி போக்கும். ஜீரணத்தை சீர்படுத்தும்.

இதய நோய் மற்றும் புற்று நோயில் இருந்து தர்பூசணி நம்மை காக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைப்பதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. நீர் கடுப்பு மற்றும் மூளைக்கு பலத்தை தரக்கூடியது தர்பூசணி.

இப்பழத்தை சாப்பிடுவதால் சிறுநீர் பிரச்சனை நீங்கும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கட்டி, ஆஸ்துமா, வீக்கம், பெருங்குடல் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்தலாம்.