குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக காரணம்

குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக காரணம்
Children-anytime-Playing-Video-Games

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மொபைல் விளையாட்டில் குழந்தைகளுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும்.

விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு!

திருடனை பிடிப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது…போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.

அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தவறு!. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும்.

மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள். ‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.

உங்கள் குழந்தைகள் தினமும் 1-2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம்.

படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள்.

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வரும்(Bone-Weakness)எலும்பு பலவீனம் நோய்

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வரும்(Bone-Weakness)எலும்பு பலவீனம் நோய்
Menopause-bone-weakness-disease

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.

35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.

எலும்புகள் கல் போன்று உறுதி கொண்டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச்சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.

மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.

நோயைத் தடுக்கும் முறைகள் :

நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.

மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும் பண்களுக்கு எலும்பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.

ஞாபகமறதி(Memory Loss) வியாதியால் பாதிக்கப்படும் பெண்கள்

ஞாபகமறதி(Memory Loss) வியாதியால் பாதிக்கப்படும் பெண்கள்
Women-most-affected-by-memory-loss


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.

வருகிற 2030-ம் ஆண்டில் உலகெங்கும் அல்சைமருடன் வாழ்பவர்கள் எண்ணிக்கை ஏழரைக் கோடியாக உயரும் என்றும், 2050-ல் அது 13 கோடியே 15 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அல்சைமரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில் அல்சைமர் தொடர்பான பிரச்சினைகளால் இறப்பவர்களில் மூன்றில் இருவர் பெண்கள்.

அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.

60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.

இவர் சுவிட்சர்லாந்தில் அல்சைமர் சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு நிபுணராகவும் உள்ளார். பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் இதில் விரிவான ஆய்வு அவசியம் என்கிறார் இவர். அல்சைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது ஏற ஏற அல்சைமர் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்சைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே அல்சைமர் வருவது குறைந்தது இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இதய நோய்கள், புகைப்பிடித்தல் பற்றி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களே இதற்குக் காரணம். மேற்கண்ட இரண்டும்தான், அல்சைமரை ஏற்படுத்துவதற்கான முக்கியக் காரணிகளாகும். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.

பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார். அமெரிக்காவில் இது போன்று இருப்பவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற தகவல்கள் பாலின அடிப்படையில் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவும் என்கிறார் மரியா தெரசா பெரட்டி. ஜூரிச் பல்கலைக்கழகத்தில் அல்சைமர் குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் இவர். இந்த யோசனை வேகமாக செயல்வடிவம் பெற்றுவருகிறது.

பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.

மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.

ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது. 

ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா?

ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா?
Pregnancy-Doubts and Reasons

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா? என்ற சந்தேகம் திருமணமான பெண்களுக்கு வழக்கமாக எழும். இதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.

ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா? எந்தச் சமயங்களில் உறவுகொண்டால் கருத்தரிக்கும்? இந்த மாதிரி கேள்விகள் திருமணமான பெண்களுக்கு வழக்கமாக எழும்.

ஆணுடைய விதையில் இருந்து விந்து வெளியாதல் அல்லது பெண்ணின் கருப்பையில் கருமுட்டை வெளியாதல் என்பதைப் பொறுத்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரிப்புக் காலம் என்பது கருத்தரித்த நேரம் தொடங்கி, பிரசவ நேரம் வரை. இது, கரு உருவான அந்த மாதத்தின் மாதவிடாய் நாளில் தொடங்கி 280 நாட்களைக் குறிக்கும்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்குப் பின் பெண்ணின் கருப்பையில் முட்டை உருவாகி, ஃபாலிக்கலில் தகுதி நிலையை அடைகிறது. மாதவிடாய் சுழற்சியின் நடுவில் ஃபாலிக்கல் உடைந்து, முட்டை விடுவிக்கப்படுகிறது. இதை, ‘ஓவலேஷன்’ என்கிறோம். மாதவிடாய் சுழற்சியின் 14-ம் நாளில் (மாதவிடாய் ரத்தப்போக்கு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 14-வது நாள்) கருப்பையின் உட்புற லைனிங் ஆன எண்டோமெட்ரியம் தடித்து, கருமுட்டையைச் சுமந்து, வளர்ப்பதற்குத் தயாராகி நிற்கிறது.

இந்த நிலையில் முட்டையானது பெண்ணின் பெரிடோனியல் குழியில் இருந்து, ஃபெலோப்பியன் குழாய் மூலமாக, கர்ப்பப்பையை அடைகிறது. இந்தத் தருணத்தில் உடலுறவு நிகழ்ந்தால், முட்டையானது கருத்தரிப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இருக்கும். உச்சநிலையின்போது, ஆணுறுப்பில் இருந்து 3 மி.லி அளவு வரை விந்து பீய்ச்சப்படுகிறது.

ஒவ்வொரு மி.லி விந்துவும் 15 மில்லியனுக்கு மேல் விந்தணுக்களைக் கொண்டிருக்கும். 1 முதல் 5 மணி நேரம் வரை இந்த விந்தணுக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் பயணிக்கின்றன. யோனியில் தொடங்கி ஃபெலோப்பியன் குழாய் வரையான இந்தப் பயணத்தின்போது, ஏராளமான விந்தணுக்கள் ஆற்றல் இழந்துபோகின்றன. இறுதியில் 3,000 விந்தணுக்கள் மட்டுமே முட்டை இருக்கும் ஃபெலோப்பியன் குழாயை அடைகின்றன. அதில், சில நூறு விந்தணுக்கள்தான் முட்டையை அடைகின்றன. அதில், ஒரு விந்தணு மட்டுமே முட்டையைத் துளைத்து கருத்தரிக்கக் காரணமாகிறது.

உடலுறவின்போது கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் என்னென்ன என்பதற்காக இதைச் சொன்னேன்.

ஒருமுறை உடலுறவுகொண்டாலும் கருத்தரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. முட்டை தயார் நிலையில் இருந்து, விந்து சரியான தருணத்தில் செலுத்தப்பட்டால், கருத்தரிக்க 100 சதவிகித வாய்ப்பு உள்ளது. கருத்தரிப்பதற்கு பலமுறை உடலுறவுகொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

எந்தெந்த நாட்களில் உறவுகொண்டால் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம் என்பது அது மாதவிடாய் சுழற்சியின் தொடர்ச்சியைப் பொறுத்தது. ஒரு பெண் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சிக்கு ஆட்படுகிறார் என வைத்துக்கொள்வோம். மாதவிடாய் ஆன நாளை, முதல் நாள் எனக் கணக்கிட வேண்டும். 9-ம் நாள் முதல் 18-ம் நாள் வரை கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நாட்கள் ஆகும். இதைச் சரியாகக் கணக்கிடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பெண்களுக்கு 28 நாட்கள் என்ற சுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவது இல்லை. 18-ம் நாள் கருத்தரிப்பு ஏற்பட்டால், அதை குறைந்தபட்ச சுழற்சி எனவும் 10-ம் நாள் கருத்தரித்தால், அதை அதிகபட்ச சுழற்சி எனவும் சொல்வோம்.

பெண்களே சினிமாவோடு வாழ்க்கையை ஒப்பீடாதீர்

பெண்களே சினிமாவோடு வாழ்க்கையை ஒப்பீடாதீர்
Women-do-not-compare-life-with-cinema


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பெண்களே உங்கள் கனவுகளோடு சினிமாக்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். யதார்த்தம் என்பது சினிமாக்களில் வருவதைக் காட்டிலும் நிறைய மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் எதிர்பார்ப்புகளும், கனவுகளும்தான். நான் டாக்டருக்கு படித்தவன். எனக்கு பத்தாவது வரை படித்த பெண்ணை திருமணம் செய்துவிட்டார்கள் என்பார்கள் சிலர்.

‘எனக்கு கணவராக வருபவர் நன்றாக ஆங்கிலம் பேசுவார், நன்றாக கார், பைக் ஓட்டுவார், பெண்களிடம் அதிகம் பேச மாட்டார் என்று நினைத்திருந்தேன்’ என்பார்கள் சிலர். ‘குண்டாக இருக்கிறார், பல்லு எடுப்பாக இருக்கிறது, கருப்பாக இருக்கிறார் இவரோடு வெளியில் செல்லவே அசிங்கமாக இருக்கிறது’ என்பார்கள் சிலர். இவை, சமூகம் நம்மைப் பார்த்து என்ன சொல்லும் என்பதை மனதில் கொள்வதால் ஏற்படும் பிரச்சனை.

நாம் நமக்காக வாழ்கிறோம். சமூகம் என்ன நினைக்கும் என்பதை கவனத்தில் கொள்வதற்கு முன் உங்களை கல்யாணம் செய்து கொண்டவரின் மனநிலை பற்றி யோசியுங்கள். நாம் அழகாக இருக்கிறோம், நம்மிடம் இவ்வளவு திறமையிருக்கிறது என்பது நினைவில் இருப்பது போல் நாம் பட்ட அவமானங்களையும் நினைவில் கொள்வது நல்லது.

அது, நம் கால்களை எப்போதும் தரையில் வைத்துகொள்ள உதவும். எவ்வளவு பெரிய சண்டையானலும் சரி அதை தீர்த்து வைக்க, மூன்றாம் நபரின் துணையை நாடாதீர்கள். அது பெற்றோராக இருந்தாலும் சரி. உங்களைப் பற்றிய ரகசியங்கள் உங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும்.

மீறி வெளியில் தெரிந்தால் அது உங்கள் மீதான நம்பிக்கையை குறைத்துவிடும். மகிழ்ச்சி, கோபம் இவையெல்லாம் மற்றவர்களால் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் திருப்தி நம் மனதில் இருந்து வந்தால்தான் உண்டு.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ராஜா, ராணி. சினிமாவில் நடப்பதெல்லாம் யதார்த்த வாழ்க்கையிலும் நடக்கும் என்று எண்ணுவது தவறு. உங்கள் கனவுகளோடு சினிமாக்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். யதார்த்தம் என்பது சினிமாக்களில் வருவதைக் காட்டிலும் நிறைய மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 

கருவளையம்(Black-Circles) - தடுக்கும் வழிமுறைகள்

கருவளையம்(Black-Circles) - தடுக்கும் வழிமுறைகள்
black-circles-under-eyes-natural-remedy


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம் - தடுக்கும் வழிமுறைகள்

தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் உண்டாகும் மாற்றம் போன்ற காரணங்களால், நாளடைவில் கண்களுக்குக் கீழே கருவளையம் உண்டாகிறது. இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் சரி செய்துவிடலாம்.

தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் உண்டாகும் மாற்றம் போன்ற காரணங்களால், நாளடைவில் கண்களுக்குக் கீழே கருவளையம் உண்டாகிறது. கருவளையம் வந்தபிறகு முகமே பொலிவிழந்து போவதாக உணர்கிறோம். தோலில் ஏற்படும் அதிக நிறமி காரணமாகவே இந்தக் கருவளையம் உண்டாகிறது. இதனால் கண்ணுக்கு ஆபத்தோ, வேறு எந்தத் தொந்தரவோ வருவதில்லை. இது, வெறும் அழகுக் குறைபாடுதான். இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் சரி செய்துவிடலாம்.

கண்ணைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மெல்லியது. வெயிலில் சுற்றுவது, கண்களை அடிக்கடி கசக்குவது, தூங்காமல் இருப்பது, அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவற்றால் கருவளையம் உண்டாகிறது. வைட்டமின் குறைபாடுகள் மற்றும் கடும் காய்ச்சல், நிமோனியா, புற்றுநோய், காசநோய் போன்றவை தாக்கும்போதும் இந்தக் கருவளையம் உருவாகிறது.

கண்களுக்குப் போதிய ஓய்வு தருதல், வைட்டமின் ஏ,ஈ, உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ளுதல், இரவில் விளக்கொளியை சரியாகப் பயன்படுத்தல், கணினியில் பணிபுரியும்போது கவனமாக இடைவெளி கொடுத்தல், மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியாக இருத்தல் போன்றவையே இந்தக் கருவளையம் உருவாகாமல் காக்கும்.

அப்படியும் உங்கள் கண்களைக் கருவளையம் தாக்கினால், கவலைப்பட வேண்டாம். கவலையே அந்தப் பிரச்சனையைப் பெரிதாக்கி விடக்கூடும். உருளைக்கிழங்கு, வெள்ளரி, புதினா, கற்றாழை போன்ற இயற்கையான காய்கறிகள், பழங்களைக்கொண்டே கருவளையத்தை நீக்கிவிடலாம். அப்படியும் நீங்கவில்லை என்றால், இதற்கென இருக்கும் மருத்துவ ஆலோசகர்களை அணுகி, முகப்பூச்சுகளை எடுத்துக்கொள்ளலாம்.

காய்கறி - பழங்கள் - விதைகளில்(Seeds-benefits) இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

காய்கறி - பழங்கள்  - விதைகளில்(Seeds-benefits) இருக்கும் ஊட்டச்சத்துக்கள்
Fruits-and-vegetables--seeds-benefits

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம்.

ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம்.

* தர்ப்பூசணி விதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்ப்பூசணி விதைகளை அப்படியே சாப்பிட விருப்பப் படாதவர்கள் முளை கட்ட வைத்து சாப்பிடுவது நல்லது. அதில் புரத சத்தும் அடங்கியிருக்கிறது.

* பப்பாளி விதைகள் கசப்பு தன்மை கொண்டவை. அதேவேளையில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை கொண்டவை. செரிமானம் சீராக நடைபெறவும் உதவும். அதில் உள்ளடங்கியிருக்கும் கசப்பு தன்மையை நீக்க தேன் கலந்து கசாயமாக தயாரித்து பருகலாம். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது.

* சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பூசணி விதைகளின் பங்களிப்பு அவசியமானது. புற்றுநோய் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது. பூசணி விதைகளை சூப்பாகவோ, தயிருடனோ அல்லது பிற காய்கறி, பழங் களுடன் சேர்த்து சாலட்டாகவோ சாப்பிடலாம்.

* சூரியகாந்தி விதைகள் ஆன்டிஆக்சிடென்ட் குணங்களைக் கொண்டுள்ளன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கீழ்வாதம், ஆஸ்துமாவை தடுக்கவும் உதவுகின்றன. செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் துணைபுரியும். நோய் எதிப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். சூரியகாந்தி விதைகளை சாலட்டுகளாகவோ, தானியங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

* சரும சுருக்கங்கள் மற்றும் தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் பலாப்பழ கொட்டைகளை சாப்பிட்டு வரலாம். இவை ரத்த சோகையை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்கும், கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது. பலாப்பழ கொட்டைகளை சமையலில் சேர்த்தோ அல்லது நீரில் வேகவைத்தோ சாப்பிடலாம்.

* ஆளி விதைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. அவைகளை வறுத்தோ, சாலட்டுகளாக தயாரித்தோ சுவைக்கலாம். ரத்த அழுத்தத்தை சீர் செய்யவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இது உதவும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உதவும்.

சித்தரத்தை(Chitharathai) - வாயு கோளாறு, இருமலை குணமாக்கும்

சித்தரத்தை(Chitharathai) - வாயு கோளாறு, இருமலை குணமாக்கும்
Gastric-problem-cough-control-chitharathai


                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
      

வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு சித்தரத்தை நல்ல மருந்து. சித்தரத்தை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. கிழக்காசிய நாடுகளில் இதனை ‘சீன இஞ்சி’ என்று அழைக்கிறார்கள். இது காரச் சுவை கொண்டது. நம் உடலில் தொண்டை மிக முக்கியமான உறுப்பு. நோய்களை தடுக்கும் சுவர் போன்றது இது. அதனால் தொண்டையை நன்றாக பாதுகாக்கவேண்டும். அதற்கு சித்தரத்தை உதவுகிறது. இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இருமல் நின்றுவிடும்.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சித்தரத்தையை கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஷீரணத்தை தூண்டும்.

* கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும்.

* இதை சிறுசிறு துண்டுகளாக்கி, அதில் நான்கைந்து துண்டுகளை, இரண்டு டம்ளர் நீர்விட்டு, மூன்று மணி நேரம் ஊறவைத்து, அந்த ஊறல் கஷாயத்தைச் சாப்பிட்டால் இருமல் போகும்.

* சின்னதாக இரண்டு துண்டு சித்தரத்தையை வாயில் அடக்கிக்கொண்டால், பேச்சுக்கிடையே வரும் இருமல் பேசாமல் அடங்கிவிடும். வறட்டு இருமல், சூட்டு இருமலுக்கு, இந்தத் துண்டுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

* வயோதிகத்தில் வரும் மூட்டுவலிக்கும், ரூமட்டாய்டு மூட்டுவலிக்கும் (Rheumatoid Arthritis) அரத்தையையும் அமுக்கராங்கிழங்கையும் நன்றாக உலர்த்தி, பொடித்து வைத்துக்கொண்டு, கால் டீஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து, காலை, மாலை உணவுக்கு முன்னர் 45 நாட்கள் சாப்பிட வேண்டும். இது ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் அழற்சியைப் போக்கி நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் இந்தப் பொடி உதவும். புற்றுநோய்க்கு, அறுவைசிகிச்சை எடுத்துக்கொண்டாலும், இந்தப் பொடியை செயல்பாடு உணவாக (Functional food) எடுத்துக்கொள்வது கூடுதல் பயனை அளிக்கும்.


* சித்தரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி இவற்றைச் சமபங்கு எடுத்து, வறுத்துப் பொடித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் இதன் திறன் குறையாது. இதன் மருத்துவச் செயல்பாட்டுக்கு, அதன் மாறாத குணம் முக்கியம். அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு, இரைப்பிருமல் எனும் ஆஸ்துமாவால் அவதிப்படுவோருக்கு, இந்தப் பொடியைக் கால் டீஸ்பூன் எடுத்துத் தேனில் குழைத்து, காலையில் உணவுக்கு முன்னர் கொடுத்து வரலாம்.

நம் ஊர் நாட்டு மருந்துக்கடைகளில் சித்தரத்தை மாதிரி பல அற்புதங்கள், அழுக்குக் கோணியில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்து, நம் பாட்டன் வீட்டுச் சொத்தான இதை பயன்படுத்தி, பாதுகாப்பாக இருப்போம்!

* வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. மேற்கண்ட பாதிப்பு கொண்டவர்கள் 10 கிராம் சித்தரத்தையை நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவேண்டும். இதற்கு வலியை நீக்கும்தன்மையும் உண்டு. மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தை சீராக்கும். தசை பிடிப்பை நீக்கும். மூட்டு வலி, வீக்கம் இருப்பவர்கள் சித்தரத்தையை இடித்து, கஞ்சியில் கலந்து சாப்பிடவேண்டும்.

* சித்தரத்தை குறுஞ்செடிகளை எளிதில் வீடுகளில் தொட்டிகளிலேயே வளர்க்கலாம். இதன் பூக்கள் மிக அழகாக இருக்கும். செடியில் நறு மணம் வீசும். இதன் கிழங்குகளை சீவி, காய்கறிகளை கலந்து சூப்பாக தயார் செய்து பருகும் வழக்கம் கிழக்காசிய நாடுகளில் உள்ளது. சாலட்டாக தயார் செய்தும் சாப்பிடுகிறார்கள்.

10 கிராம் அளவுக்கு கிழங்கை எடுத்து, அரைத்து, எலுமிச்சம்பழ சாற்றில் கலந்து, தேனும் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குறையும். பற்களும் பளிச்சிடும்.