சீமை மாட்டுப்பால் மெல்லக் கொல்லும் விஷம்!

சீமை மாட்டுப்பால் மெல்லக் கொல்லும் விஷம்!

சீமை மாடு என்பதே ஒரு நோய் கூடம். சீமை மாட்டுப் பாலும், நம் நாட்டுப் பசும்பாலும் பார்க்க ஒன்று போலவே இருந்தாலும், இரண்டிலும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.
பாலின் முக்கிய அங்கமான பால் புரதமானது (Milk Protien) நாட்டுப் பசுவில் A2 Beta – Casein ஆகவும், சீமை மாடுகளில் A1 Beta – Casein ஆகவும் மாறுபடுகிறது.
இதில் A1 Beta – Casein புரதம் மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்பொழுது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். BCM7 என்னும் புரோட்டீன் மூலக்கூறு சீமை மாட்டுப் பாலில் பல வியாதிகளுக்கு அடித்தளமிடுகிறது. மார்பின், ஓபியம் போதைப்பொருளோடு ஒப்பு நோக்கக்கூடிய ரசாயண மூலக்கூறுகளாகும்.
இதற்கு சரியான உதாரணம், நாட்டுப் பசுவின் கன்றுகள் பால் குடித்தவுடன் உற்சாகமாக துள்ளி விளையாடும். ஆனால் சீமை மாட்டுக் கன்றுகள் சோர்ந்து தூங்கும்.
இந்த சீமை மாட்டின் பாலை மனிதர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்க கொடுக்க குழந்தையின் மூளை வளர்ச்சி மந்தத்தன்மையுடன் வளரும், மேலும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்காது. குழந்தைகளின் மரபணுக்களில் மாற்றம் உண்டாகுகின்றது, மனித உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் சம நிலையை தடுமாற செய்கின்றது.
இதன் தாக்கம் பிட்டியூட்டரி, தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட முக்கிய சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் உடலின் வளர்ச்சி முதல் அனைத்து உறுப்புக்கள், புத்தி, மனோ நிலை என அனைத்தும் தடுமாறச் செய்கின்றது. இதன் மூலம் புதுப்புது வியாதிகள் பெருகிக்கொண்டே போகின்றது.
இத்துடன் A1 Beta Casein புரதமானது நம் உடலின் இன்சுலின் சுரப்பியின் புரதத்தை ஒத்திருப்பதால் ஹார்மோன் சுரப்பி நிலை தடுமாறுகிறது. காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தடுமாற்றம் சர்க்கரை நோயை வரவழைக்கிறது.
இன்னும் ஒரு மோசமான, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் கேட்டிராத நோய் ஆட்டிசம் ( சதை பிறழ்வு நோய்) இந்த சீமை மாட்டுப் பாலை குழந்தைகளுக்கு தொடர்ந்து தருவதால் அவர்களது உடலையும், மூளையையும் ஒரு சேர தாக்குகின்ற கொடிய நோய் ஆகும்.
சீமை மாட்டுகளின் உடலில் ஆண், பெண் செக்ஸ் ஹார்மோன்கள் சம நிலையில் இல்லை. பெரும்பாலும் பெண் (கிடாரிகள்) மாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக ஊசிகள் மூலமே நடைபெறுவதினாலும், அவைகளில் ஆண் (காளை) மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மந்தமானதாகவும், பசு மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மிகுதியாகவும் உடையதாகவும் உள்ளது.
இது போன்ற குறைபாடுள்ள சிமை மாட்டுப் பாலை பருகும் மக்களுக்கும் அந்த பாதிப்பு வெளிப்படுகிறது. மலட்டுத்தனம், பாலியல் குறைபாடு, மாதவிடாய், கர்பப்பை, பால் சுரப்பு கோளாறுகள் போன்றவை சில.
சீமை மாட்டுப் பால் ஒரு மெல்லக் கொல்லும் விஷம் போல. அதன் பாதிப்புகள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டிற்கு வந்த புதிதில் சரிவிகிதமாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டுப் பசுக்களின் தாக்கம் சரி விகிதமாக இருந்தது. அதனால் அன்றைய கால கட்டங்களில் தெரியவில்லை. தற்பொழுது நம் நாட்டு மாடுகள் பெரும்பாலும் ஒழிந்து, சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் நோய்களின் பெருக்கம் நன்றாக தெரிய துவங்கியுள்ளது.
எனவே முடிந்தால் நாட்டுப் பசுவின் பாலை அருந்துங்கள், அல்லது தற்பொழுது கிடைத்து வரும் சீமை மாட்டுப் பால், பால் பொருட்கள் உபயோகிப்பதை தவிருங்கள்.
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!